Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடியிடம் முதல்வர்கள் வலியுறுத்தல்

ஏப்ரல் 11, 2020 09:10

பிரதமர் மோடியுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஊரடங்கை ஏப்., 30 வரை நீட்டிக்க வேண்டும் என மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் வலியுறுத்தினர்.

கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் முறையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய டில்லி முதல்வர் கெஜ்ரிவால், நாடு முழுவதும் ஊரடங்கை வரும் ஏப்., 30 வரை நீட்டிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் உள்ளிட்ட பெரும்பாலான முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைப்புச்செய்திகள்